சிபி சக்கரவர்த்தி கதை Chola Mannar?
சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ்மொழி சோழநாட்டின் பெருமையை எடுத்துரைக்கின்றது. சோழ நாட்டை சோழர்கள் பலர் ஆட்சிபுரிந்தனர். அம்மன்னர்களுள் ஒருவன்தான் சிபிச் சக்கரவர்த்தி.
புலிக்கொடியும் ஆத்தி மாலையையும் அணிந்து வீரத்திலும் தீரத்திலும், ஈகையிலும் சோழர்கள் சிறந்து விளங்கினார்கள்.
எல்லா உயிர்களையும் தம்முயிர்போல எண்ணி உயிர்களிடத்தில் கருணை செலுத்தி வாழ்ந்து பேரும் புகழும் பெற்றனர்.
உயர்திணையிடம் கருணை காட்டுவதில் காட்டியதைவிட அஃறிணையிடத்தில் அளவு கடந்து காட்டினர். இவ்வாறு சோழப் பேராசர்கள் முறைசெய்து காப்பாற்றியதால் மக்கள் தெய்வமாக போற்றி வணங்கினர்.
இத்தகைய பெருமை வாய்ந்த சோழர் குடியில், சிபி என்னும் சோழன் ஒருவன் தோன்றினான். சிபியின் கருணை உள்ளத்தைக் கண்டு மக்கள் மன்னனைத் தங்களின் உயிராகவே எண்ணினர்.
தன்னுயிரைப் போலவே மன்னுயிரையும் கருதிய சிபியின் வாழ்க்கையில், எக்காலத்தும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனுநீதிச்சோழனின் வழியில் வந்தவன் என்பதைக் காட்டிக்கொள்ளும்படியான சமயமொன்று நேர்ந்தது.
Comments
Post a Comment