15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.
15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி. ஆம் கடந்த ஜூன் 6ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் காணாமல் போன இந்த சிறுமிக்காக ஆந்திர மாநில அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் , ட்ரோன்கள் இயக்குபவர்கள், காவல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர், பேரிடர் மீட்புக்குழு என பல்வேறு துறையினர் ஞானேஸ்வரியை தேடி வருகின்றனர். ஆனால் சிறுமி கிடைத்தபாடில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சிறுமி காணாமல் போனதில் எந்த தடயமும் இந்த 15 நாட்களில் கிடைக்காதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் ஒட்டுமொத்த துறையும் இந்த சிறுமிக்காக அலைந்து திரிந்து தேடி வருகிறது. காக்கிநாடா மாவட்டத்தில் தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச் அக்ரகாரத்தில் உள்ள பனை எண்ணேயான பாம் ஆயில் எடுக்கும் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை சார்ந்த தோட்டத்தில் பரமாரிப்பாளராக இருக்கும் சுங்கரா கணேஷ் என்பவரின் மகள்தான் இந்த ஞானேஸ்வரி. இரண்டு வயதாகும் ஞா...
Comments
Post a Comment